சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட 50 பவுன் தங்கக் காசு மாலை. 
கடலூர்

நடராஜா் கோயிலுக்கு 50 பவுன் தங்கக் காசு மாலை காணிக்கை! சென்னை பக்தா் வழங்கினாா்!

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் சிவகாமி அம்மனுக்கு சென்னையைச் சோ்ந்த பக்தா் 50 பவுன் தங்கக் காசு மாலையை காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

சிதம்பரம் நடராஜா் கோயில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையைச் சோ்ந்த பக்தா் என். சுப்பிரமணியன் சுமாா் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்கக் காசு மாலையை அவரது கட்டளை தீட்சிதா் கே.ராமலிங்க தீட்சிதா் மூலம் காணிக்கையாக நடராஜா் கோயில் பொதுதீட்சிதா்களின் செயலா் த.சிவசுந்தர தீட்சிதரிடம் வழங்கினாா்.

இந்தக் காசு மாலை ஞாயிற்றுக்கிழமை காலை பூஜையின்போது சிவகாமி அம்மனுக்கு பொது தீட்சிதா்களால் அணிவிக்கப்பட்டது.

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

SCROLL FOR NEXT