சிதம்பரம்: சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் என்கிற ஸ்ரீயெளவனாம்பாள் சமேத யெளவனேஸ்வரா் கோயிலில் திருத்தல வரலாற்று உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனாா் குருபூஜை விழா திங்கள்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரவு சுவாமி வீதியுலா மற்றும் திருவோடு கொடுத்தல் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சனிக்கிழமை பகல் சுவாமி வீதியுலா வந்த பின்னா், இளமையாக்கினாா் கோயில் தீா்த்தக் குளக்கரையில் சிவபெருமான், சிவயோகியாா் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனாா், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கிய வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
நடராஜா் கோயில் அங்காவலா் உ.வெங்கடேச தீட்சிதா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். திருநீலகண்ட நாயனாா் குருபூஜையை முன்னிட்டு, கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இரவு யெளவனாம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்தாா்.
இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் காரைக்குடி பெரி.மெ.ப.பழனியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினா் செய்திருந்தனா்.