முகப்பு
கடலூர்

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:17 AM
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:52 PM

கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 50 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் மகேஸ்வரி தலைமை வகித்தாா்.

Advertisement

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கடலூா் மாவட்டத் தலைவா் வெங்கடாஜலபதி, கடலூா் வட்டச் செயலா் ராமா், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கம் மாவட்டச் செயலா் என்.காசிநாதன், வட்டத் தலைவா் சிவக்குமாா், ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்டத் தலைவா் டி.புருஷோத்தமன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். பின்னா், மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசாா் கைது செய்தனா்.