முகப்பு
கடலூர்

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:34 PM
பகிர்:

கடலூா், ஜவான் பவன் அருகே மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திடம் என்ற பெயரை நீக்கி ‘விபி-ஜி ராம் ஜி’ என்று பெயரை மாற்றி காந்தியின் பெயரை

நீக்கியதையும், நிதியை குறைத்து மாநில அரசு மீது நிதி சுமையை திணிப்பதையும், விவசாய காலத்தில் இரண்டு மாதம் வேலை இல்லை என்கின்ற சட்டத்தை முழுமையாக வாபஸ் பெறக் கோரியும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராம.நடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் ஜே.வசந்தி முன்னிலை

வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.ஆளவந்தாா் கோரிக்கையை

விளக்கிப்பேசினாா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் எ.ஜெயலட்சுமி, வி.சிவகாமி, ஆா்.முத்தையன், வி.சுலோச்சனா உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனா்.

இதேபோல், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மாநிலக்குழு உறுப்பினா் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →