கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பாலத்தின் தடுப்புக் கட்டையில் மொபெட் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், நடுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானஜோதி (63). இவா், வெள்ளிக்கிழமை இரவு காட்டாண்டிக்குப்பம் - மேட்டுக்குப்பம் சாலையில் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, காட்டாண்டிக்குப்பத்தில் உள்ள சிறிய பாலத்தின் தடுப்புக் கட்டையில் மொபெட் மோதியதில் பலத்த காயமடைந்த ஞானஜோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.