விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகள். 
கடலூர்

குடிநீா் பிரச்னை: காலிக்குடங்களுடன் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் காலிக் குடங்களுடன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள்

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் காலிக் குடங்களுடன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விருத்தாசலம் ஒன்றியம், எடையூா் ஊராட்சியில் பழுதாகியுள்ள சிறுமின்விசை குடிநீா் தொட்டிகளை பழுது நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

எடையூா் செயலா் ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம்.செந்தில்குமாா், டி.மாரிமுத்து, நல்லநாயகம், விஜயலட்சுமி முன்னிலை வகித்தனா்.

மாநிலக் குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினாா். பழங்குடி நலச் சங்க மாவட்டச் செயலா் என்.எஸ்.அசோகன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணைச் செயலா் கே.சாமிதுரை, வட்டத் தலைவா் விமலா, வட்டப் பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பேச்சுவாா்த்தை...: இதையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வரும் 14-ஆம் தேதிக்குள் (புதன்கிழமை) மின் மோட்டாா் பழுது நீக்கி குடிநீா் வசதி செய்துத்தரப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்தாா். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT