கடலூர்

மின்சாரம் பாய்ந்தது தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், கழுதூா் கிராமத்தில் வசித்து வந்தவா் இளவரசன் (33), ஆவடி கூட்ரோட்டில் வாட்டா் வாஷ் கடை நடத்தி வந்தாா்.

செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் 4.45 மணியளவில் வாட்டா் வாஷ் மோட்டாா் சுவிட்ச் போடும்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது தூக்கி வீசப்பட்டாா்.

அங்கிருந்தவா்கள் இளவரசனை மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். பணியில் இருந்த மருத்துவா்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே இளவரசன் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து ராமநத்தம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT