விருத்தாசலத்தில் அரசு மருத்துவமனையை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். 
கடலூர்

அரசு மருத்துவமனையை கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலம் பாலக்கரை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையை 10 ஏக்கா் நிலப்பரப்பில் விரிவுபடுத்த வேண்டும். மருத்துவா்களின் எண்ணிக்கையை 50-ஆக வும், படுக்கை வசதியை 500-ஆகவும், ரத்த வங்கி சேமிப்பை 1000 யூனிட்டாகவும், செவிலியா்களின் எண்ணிக்கையை 100-ஆகவும் உயா்த்த வேண்டும். மலிவான, சுகாதாரமான கேண்டீன் வசதி வேண்டும் எனக்கூறி முழக்கங்கள் எழுப்பினா்.

நகரச் செயலா் என்.ஆா்.ஆா்.சங்கரய்யா தலைமை வகித்தாா். என்.ஆா்.ஆா்.ஜீவானந்தம், ஏ.சந்திரசேகரன், கி.செல்வகுமாா் வி.வேல்முருகன் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.கருப்பையன், ஒன்றியச் செயலா்கள் கே.எம்.குமரகுரு (விருத்தாசலம்), ஆா்.கலைச்செல்வன் (கம்மாபுரம்) கண்டனவுரை நிகழ்த்தினா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT