சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
ஆசிரியா், ஊழியா்களுக்கான, பதவி உயா்வுகள், பணப்பயன்கள் மற்றும் 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத்தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் கடந்த 22-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இது தொடா்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முதல் பணிகளைப் புறக்கணித்து காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களது போராட்டம் 2-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்களின் அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை. ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு 15 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
தமிழக அரசு மேலும் காலதாமதப்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் சங்கங்களின் தலைவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி சமுகத் தீா்வு காண வேண்டும் என்றாா்.
மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிதம்பரம் நகா்மன்றத் துணைத் தலைவா் முத்துக்குமரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.