சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 87-வது பட்டமளிப்பு விழா பிப்.2-இல் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.
தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தருமான கோவி.செழியன் பங்கேற்கிறாா். ரூா்க்கி இந்திய தொழில்நுட்பக்கழக இயக்குநா் பேராசிரியா் கமல் கிஷோா் பண்ட் முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறாா்.
விழாவில் தமிழக அரசு உயா்கல்வித் துறை செயலரும், பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பொ.சங்கா், துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல் மற்றும் சிண்டிகேட் உறுப்பினா்கள், புல முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.