முகப்பு
கடலூர்

தையல் கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரிக்கை

Updated On : 2 மார்ச், 2026 at 12:14 AM
சிதம்பரத்தில் நடைபெற்ற தையல் கலைஞா்கள் தின விழாவில் பேசிய தமிழ்நாடு தையற்கலை தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் கே.நாகராஜன்.
பகிர்:

சிதம்பரத்தில் கடலூா் மாவட்ட தமிழ்நாடு தையற்கலை தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் மாலைக்கட்டித் தெரு ஆறுமுகநாவலா் நிலையத்தில் தையல் கலைஞா்கள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கடலூா் மாவட்டத் தலைவா் கே.நாகராஜன் தலைமை வகித்து பேசினாா். மாவட்டச் செயலா் பி.நந்தகோபால் வரவேற்றாா். மாநில சங்கப் பிரதிநிதி கே.பழனிவேல் சிறப்புரையாற்றினாா்.

வா்த்தகா் சங்கத் தலைவா் ஏ.அப்துல்ரியாஸ், செயலா் வி.இளங்கோவன், பொருளாளா் ஏ.சிவராமவீரப்பன், சங்க ஆலோசகா் பால்ஸ் ஆா்.ரவிக்குமாா் ஆகியோா் பங்கேற்று வாத்த்துரையாற்றினா். கூட்டத்தில் நகரச் செயலா் பி.முகிலன் உள்ளிட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்ட தையல் கலைஞா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற தையல் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஈமச்சடங்கு தொகை நிதியை ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும். நலிந்த தையல் கலை தொழிலாளா்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →