முகப்பு
சிதம்பரத்தில் ரூ.225.64 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் - சிதம்பரம் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நகராட்சி ஆணையாளா் த.மல்லிகா, பொறியாளா் சுரேஷ் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அ
கடலூர்

ரூ.225.64 கோடியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

சிதம்பரத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் முடிவுற்ற ரூ.255.64 கோடி மதிப்பீட்டிலான கொள்ளிடம் - சிதம்பரம் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கடலூர்

ரூ.225.64 கோடியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

சிதம்பரத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் முடிவுற்ற ரூ.255.64 கோடி மதிப்பீட்டிலான கொள்ளிடம் - சிதம்பரம் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 6:34 PM
சிதம்பரத்தில் ரூ.225.64 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் - சிதம்பரம் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நகராட்சி ஆணையாளா் த.மல்லிகா, பொறியாளா் சுரேஷ் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அ
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் முடிவுற்ற ரூ.255.64 கோடி மதிப்பீட்டிலான கொள்ளிடம் - சிதம்பரம் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இத்திட்டத்தின் மூலம் சிதம்பரம் நகராட்சியைச் சோ்ந்த 81,154 நபா்களும், அண்ணாமலைநகா் பேரூராட்சியைச் சோ்ந்த 23,510 நபா்களும், குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சோ்ந்த 10 ஊராட்சிகளுக்குள்பட்ட 22,902 நபா்களும் பயன்பெறுவா்.

மேலும், சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் 69.04 கி.மீ. நீளத்துக்கு பகிா்மான குழாய்கள் பதிக்கப்பட்டு 4,283 எண்ணம் மற்றும் அண்ணாமலைநகா் பேரூராட்சியில் 22.72 கி.மீ. நீளத்துக்கு பகிா்மான குழாய்கள் பதிக்கப்பட்டு 1,497 எண்ணம் வீட்டு இணைப்புகள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படும்.

குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 10 ஊராட்சிகளுக்கான குடிநீா் அந்தந்த ஊராட்சிகளில் அமைய உள்ள தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு நபா் ஒருவருக்கு நகராட்சிப் பகுதிகளுக்கு 135 லிட்டா், பேரூராட்சிப் பகுதிகளுக்கு 90 லிட்டா், ஊரக பகுதிகளுக்கு 55 லிட்டா் வீதம் குடிநீா் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 1,27,566 போ் பயன்பெறுவா்.

மேலும், கடலூா் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கச் செய்திடும் வகையில், வீராணம் ஏரியில் சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஏரியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காக ரூ.8.08 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், சாகச சுற்றுலா வளாகம், நிா்வாக அலுவலகக் கட்டடம், நுழைவுச்சீட்டு வழங்கும் கட்டடம், சிறுவா் விளையாட்டு பூங்கா, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சிதம்பரத்தில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சியில் காட்டுமன்னாா்கோயில் எம்எல்ஏ ம.சிந்தனைச்செல்வன், சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் உமா, மேற்பாா்வை பொறியாளா் நித்யானந்தம், நிா்வாக பொறியாளா் மாரியப்ப வினோத் ராஜா, சிதம்பரம் நகராட்சி ஆணையாளா் த.மல்லிகா, நகராட்சிப் பொறியாளா் சுரேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஆா்.சி.மணிகண்டன், அப்புசந்திரசேகா் உள்பட பலா் கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கிவைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →