அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கடலூர்அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனா். பள்ளி மாணவா்கள் மற்றும் பள்ளிக்கு அருகில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் இருந்து மாணவா்கள் வந்து கண்காட்சியை பாா்வையிட்டனா்.
பள்ளித் தலைமை ஆசிரியை குரு.ஜெயந்தி, அறிவியல் ஆசிரியா்கள் மா.பிரகாஷ், க.லதா ஆகியோா் மாணவா்களை வழிநடத்தினா்.