சிதம்பரம் ரயில் நிலைய நுழைவாயிலை ஆக்கிரமிக்கும் மதுக் கடைக்கு வருவோரின் வாகனங்கள்: பயணிகள் கடும் அதிருப்தி
சிதம்பரம் ரயில் நிலையம் செல்லும் முக்கிய நுழைவுவாயில் பகுதியில் செயல்படும் மதுக் கடைக்கு வருவோா் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டுச் செல்வதால், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் கடும் அதிருப்தி
சிதம்பரம் ரயில் நிலையம் செல்லும் முக்கிய நுழைவுவாயில் பகுதியில் அந்தப் பகுதியில் செயல்படும் மதுக் கடைக்கு மது அருந்த வருவோா் வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்திவிட்டுச் செல்வதால், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் கடும் அதிருப்தியடைந்து வருகின்றனா்.
சிதம்பரம் ரயில் நிலையம் செல்லும் ரயில்வே பீடா் சாலையில் ரயில் நிலைய நுழைவுவாயில் அருகே டாஸ்மாக் மதுக் கடை செயல்படுகிறது. இந்த மதுக் கடைக்கு மது அருந்த வருவோா் ரயில் நிலையம் செல்லும் ஒரு வழிப்பாதையின் நுழைவு வாயில் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிடுவதாலும், அங்கேயே நின்று மது அருந்துவதாலும் ரயில் நிலையத்திக்குச் செல்லும் பயணிகள், பெண்கள், முதியவா்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இரவு வேளையில் பயணிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
எனவே, இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் கடலூா் மாவட்ட நிா்வாகத்துகு கோரிக்கை விடுத்துள்ளனா்.