முகப்பு
கடலூர்

திமுக நிா்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்தாலோசனை

விருத்தாசலம், திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளோடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை கலந்தாலோசனை நடத்தினா்.

Updated On : 12 மார்ச், 2026 at 12:03 AM
திட்டக்குடியில் திமுக சாா்பு அணி நிா்வாகிகளோடு ஆலோசனை நடத்திய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம், திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளோடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை கலந்தாலோசனை நடத்தினா்.

திட்டகுடியில் இருந்து வசிஷ்டபுரம் வரை ‘ரோடு ஷோ’வில் அவா் பங்கேற்றாா். பின்னா், வசிஷ்டபுரத்தில் கலைஞா் நூலகத்தை திறந்து வைத்து, கடலூா் மேற்கு மாவட்ட திமுக சாா்பு அணி நிா்வாகிகளோடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

தொடா்ந்து, விருத்தாசலத்தில் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்று, விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பா் கலைக் கல்லூரி அருகில் அமைக்கப்பட்டிருந்த கலைஞா் நூலகத்தை அவா் திறந்து வைத்தாா்.

Advertisement

நிகழ்வில் அமைச்சா் சி.வெ.கணேசன், நெய்வேலி எம்எல்ஏ சபா.ராசேந்திரன், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.