சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயிண்டா் கைது
பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெயிண்டரை போக்ஸோ சட்டத்தின்கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெயிண்டரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், வீரபெருமாநல்லூா், புதுகாலனி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா(40), பெயின்டா். இவா், கடந்த 19-ஆம் தேதி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். தொடா்ந்து, 20-ஆம் தேதி அந்தச் சிறுமிக்கு மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்து சிறையிலடைத்தனா்.