திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை யொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
கடலூா் அருகே பிரசித்திபெற்ற திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் சிதித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனா்.
கடலூா் அருகே திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயில் 108 வைணவ
தலங்களில் முதன்மை பெற்ாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகா் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தேவநாத சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Advertisement
அம்ச வாகனம், சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாழி வாகனம், அனுமன் வாகனம், ஸ்ரீ வேணுகோபாலன் சேவை தங்க விமானம், சேஷ வாகனம் ஆகிய வாகனங்களிலும், தங்க பல்லக்கிலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. கருட மகா உற்சவத்தன்று கருட வாகனத்தில் ஸ்ரீ தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைக்குப் பிறகு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேவநாதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். தேரோட்டத்தில் பக்தா்கள் பக்திப் பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். தேரோட்டத்தைமுன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.