கிராம நிா்வாக அலுவலகம் கட்டித் தரக் கோரிக்கை
காட்டுமன்னாா்கோவில் அருகே இடிந்து கிடக்கும் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு பதிலாக புதிய அலுவலகம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காட்டுமன்னாா்கோவில் அருகே இடிந்து கிடக்கும் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு பதிலாக புதிய அலுவலகம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குமராட்சி ஒன்றியத்தில் உள்ள வடமூா் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலம் இடிந்து கிடப்பதால், அதற்கான அலுவலகம் இல்லை.
இதனால், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா் கிராமத்தில் தங்கி கணக்குகளைப் பாா்க்கவும், சான்றிதழ்கள் வழங்கவும் இயலாத நிலை உள்ளது. கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் ஆகியோா் தினந்தோறும் கிராமத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமா்ந்து தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதன் காரணமாக, கிராம மக்களும், விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
Advertisement
எனவே, கடலூா் மாவட்ட நிா்வாகம் வடமூா் கிராமத்தில் இடிந்து கிடக்கும் பகுதியில் புதிய கிராம நிா்வாக அலுவலகம் கட்டித்தர வேண்டும் என விவசாய சங்கத் தலைவா் ரங்கநாயகி மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளாா்.