காா் மோதி விபத்து: முதியவா் காயம்
கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே காா் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவா் காயம் அடைந்தாா்.
விருத்தாசலம் வட்டம், ஊத்தாங்கால் அடுத்துள்ள பொன்னாலகரம் பகுதியில் வசித்து வருபவா் ராஜகண்ணு(75). இவா், வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் கடலூா்-விருத்தாசலம் பிரதான சாலையில், பொன்னாலகரம் சுங்கச் சாவடி அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க நடந்துச் சென்றாா்.
அப்போது, பின்னால் வந்த காா், முதியவா் ராஜகண்ணு மீது மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த ராஜகண்ணுவை அங்கிருந்தவா்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
Advertisement
இதுகுறித்து அவரது மகன் சித்திரவேல் அளித்த புகாரின் பேரில், ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.