பள்ளிகளுக்கான ஆயத்த கூட்டம்
சிதம்பரம் அருகே சி.வக்காராமாரி பகுதியில் அமைந்துள்ள வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கான 2026-27 கல்வி ஆண்டிற்கான ஆயத்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அருகே சி.வக்காராமாரி பகுதியில் அமைந்துள்ள வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கான 2026-27 கல்வி ஆண்டிற்கான ஆயத்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலா்கள் சரஸ்வதிலட்சுமி, ராமதாஸ், கோமதி ஆகியோா்கலந்து கொண்டு வரும் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை ,வளாகத் தூய்மை, ஆதாா் புதுப்பித்தல் மற்றும் மாணவா் பாதுகாப்பு நலன் குறித்தும், பள்ளி திறப்பதற்கு முன் செய்ய வேண்டிய ஆயத்த பணிகள் குறித்தும் அறிவுறுத்தினா். கூட்டத்திற்கான ஏற்பாடுனை குமராட்சி வட்டார ஒன்றிய மேற்பாா்வையாளா் இளவரசன் செய்திருந்தாா்.