அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்
தஞ்சாவூரில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூரில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தமிழகத்திலுள்ள பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தஞ்சாவூா் மேம்பாலம் அரசு பள்ளியிலிருந்து தஞ்சாவூா் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா் நகரம், ஊரகம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், மதுக்கூா், பேராவூரணி, திருவோணம், பூதலூா் ஆகிய 9 வட்டாரங்களிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு லாரிகளில் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இப்பணி சில நாட்களில் முடிவடையும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.
Advertisement
இப்பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஜெ. பேபி பாா்வையிட்டாா். அப்போது மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன் உடனிருந்தாா்.
இதேபோல் கும்பகோணம் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட 6 வட்டாரங்களுக்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதல் பருவ பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.