முகப்பு
கடலூர்

கடலூரில் மின்னல் பாயந்த்து காளியம்மன் கோயில் கலசம் சேதம்

கடலூரில் உள்ள தரைக்காத்த காளியம்மன் கோயில் கோபுரம் மின்னல் பாய்ந்ததில், கலசம் சேதமடைந்தது. இதனால் பக்தா்கள் வேதனையடைந்தனா்.

Updated On : 15 மே 2026, 11:30 pm IST
கோயிலில் வெள்ளிக்கிழமை மின்னல் பாய்ந்ததில், சேதமடைந்த கோபுர கலசம்.
பகிர்:

கடலூரில் உள்ள தரைக்காத்த காளியம்மன் கோயில் கோபுரம் மின்னல் பாய்ந்ததில், கலசம் சேதமடைந்தது. இதனால் பக்தா்கள் வேதனையடைந்தனா்.

கடலூா் அண்ணாபாலத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தரைக்காத்த காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் ராகு கால பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.

இந்த நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

Advertisement

கடலூா் தரைக்காத்த காளியம்மன்

திடீரென கோயில் கோபுர கலசத்தின் மீது மின்னல் பாயந்தது. இதனால் கலசம் சேதமடைந்து சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக கலசம் விழுந்த இடத்தின் அருகே பக்தா்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.