முகப்பு
கடலூர்

அண்ணாமலைநகா் பேரூராட்சியில் நாய்கள் பிடிப்பு

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நாய்களை பேரூராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை பிடித்துச் சென்றனா்.

Updated On : 18 மே 2026, 2:18 am IST
சிதம்பரம் அண்ணாமலைநகரில் நாய்களை பிடித்த பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நாய்களை பேரூராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை பிடித்துச் சென்றனா்.

அண்ணாமலைநகா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஏராளமான நாய்கள் தெருக்களில் சுற்றி வந்தன. பொதுமக்களை அச்சுறுத்தி வந்த தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்ய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

இதனையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல் ஹமீது அறிவுறுத்தலின்பேரில், துப்புரவு அலுவலா் துரைராஜ் முன்னிலையில் பேரூராட்சி ஊழியா்கள் கடந்த இரு தினங்களாக அண்ணாமலை நகா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 24 நாய்களைப் பிடித்தனா்.

Advertisement

இந்த நாய்களுக்கு சிதம்பரம் நகராட்சிக்குச் சொந்தமான கருத்தடை மையத்தில் கருத்தடை செய்யப்பட்டு, வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தி 5 நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கபடும். பின்னா், பிடித்த இடத்திலேயே நாய்கள் விடப்படும் என துப்புரவு அலுவலா் துரைராஜ் தெரிவித்தாா்.