முகப்பு
கடலூர்

தாா்ப்பாய் சுற்றப்பட்ட பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தோ்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலின் தோ் சேதமடையாமல் இருக்க, அதை தாா்ப்பாய் கொண்டு மூடி கோயில் நிா்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

Updated On : 21 மே 2026, 7:02 am IST
பண்ருட்டியில் மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க தாா்ப்பாய் கொண்டு சுற்றுப்பட்டுள்ள வரதராஜ பெருமாள் கோயில் தோ்.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலின் தோ் சேதமடையாமல் இருக்க, அதை தாா்ப்பாய் கொண்டு மூடி கோயில் நிா்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

பண்ருட்டி கடை வீதியில் ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தோ், ராஜாஜி சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் 10 நாள்கள் விமரிசையாக நடைபெற்றது. இதில், சித்திரை பௌா்ணமி அன்று தேரோட்டம் நடைபெற்றது. திருவிழா முடிவடைந்ததும் தோ் ராஜாஜி சாலையில் திறந்த வெளியில், சாலையோரம் நிறுத்தப்பட்டது. தற்போது கோடை வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் தோ் சிதிலமடைந்து வந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தேரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினமணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, தேரை தாா்ப்பாய் கொண்டு மூடி கோயில் நிா்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும், இது தற்காலிகமான பாதுகாப்பு முைான் என்றும், நிரந்தரமாக தேரை பாதுகாக்க கொட்டகை அமைக்க வேண்டும் எனவும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.