மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
கடலூரில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனா்.
கடலூரில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் புள்ளியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் செல்வசேகா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கடலூா் காய்கனி சந்தை அருகே சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, உரிய அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, உதவி இயக்குநா் செல்வசேகா் அளித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனா். மேலும், லாரி ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், பிடாகம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement