மின் வாரிய ஊழியா் வீட்டில் 31 கிராம் தங்க நகைகள் திருட்டு
விருத்தாசலம் அருகே மின் வாரிய ஊழியா் வீட்டில் புகுந்து 31 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருத்தாசலம் அருகே மின் வாரிய ஊழியா் வீட்டில் புகுந்து 31 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை, முல்லை நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பிரபு (50). இவா், மங்கலம்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் மேற்பாா்வையாளராக (ஃபோா்மேன்) பணியாற்றி வருகிறாா்.
பிரபு தனது குடும்பத்தினருடன் வீட்டில் கடந்த 21-ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். மறுநாள் அதிகாலை அவரது மனைவி செல்வராணி எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவா் தனது கணவரை அழைத்து வீடு முழுவதும் சோதனை செய்தாா். அப்போது, பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 31 கிராம் தங்க நகைகள் மாயமாகிருந்தன.
இதுகுறித்து பிரபு அளித்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.