கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
கடலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் புதுநகா் காவல் நிலைய சாா்பு - ஆய்வாளா் முகில்அரசு தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கடலூா் கொண்டூா் மயானம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்டபோது, பைக்கில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவா் கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் ஜீவா நகரைச் சோ்ந்த நிஜாம் (31) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சாா்பு - ஆய்வாளா் முகில்அரசு அளித்த புகாரின்பேரில், புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து நிஜாமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement