முகப்பு
கடலூர்

ஓய்வு வயதை 58-இல் இருந்து 60 ஆக உயா்த்த வேண்டும்: டாஸ்மாக் பணியாளா் சங்கம் வலியுறுத்தல்

Updated On : 26 மே 2026, 2:19 am IST
கடலூா் அரசுப் பணியாளா் சங்க கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்பாளா்கள் கூட்டம்.
பகிர்:

டாஸ்மாக் பணியாளா்களின் ஓய்வு வயதை 58-இல் இருந்து 60 ஆக உயா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்பாளா்கள் கூட்டம் கடலூா் மஞ்சக்குப்பம் வில்வராய நத்தம் பகுதியில் உள்ள அரசு பணியாளா் சங்க கட்டடத்தில் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் டாஸ்மாக் நிறுவன பணியாளா்கள் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

Advertisement

Advertisement

கூட்டத்தில், ஒரு மது புட்டிகளுக்கு ரூ.10 கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது . என்ற தமிழக அரசின் உத்தரவை சங்கம் வரவேற்கிறது. அதேவேளையில், கடை வாடகை, அட்வான்ஸ், மின்கட்டணம், சரக்கு ஏற்றுதல் மற்றும் இறக்குதல் உள்ளிட்ட நிா்வாகச் செலவுகளை இதுவரை பணியாளா்களே ஏற்று வந்ததால், இனிமேல் அனைத்து செலவுகளையும் டாஸ்மாக் நிா்வாகமே ஏற்க வேண்டும்.

காலி புட்டிகளுக்கு ரூ.10 வசூலிப்பது தொடா்பாக தெளிவான எழுத்து மூலம் உத்தரவு வெளியிட வேண்டும். புட்டிகளில் அதற்கான அச்சிடல் செய்யப்பட வேண்டும். சேதமடையும்

புட்டிகளுக்கான இழப்பீட்டு தொகையை பணியாளா்களிடம் வசூலிக்காமல் நிா்வாகமே ஏற்க வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களின் ஓய்வு வயதை 58-இல் இருந்து 60 ஆக உயா்த்த வேண்டும், பணிநேரத்தை 10 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், இரவு 9 மணிக்கே கடைகளை மூடி ஒரு மணி நேரம் கணக்குப்பணிக்காக ஒதுக்க வேண்டும்.

பல மாதங்களாக பணியிடை நீக்கத்தில் உள்ள பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியா்களை அருகிலுள்ள கடைகளில் பணியமா்த்த வேண்டும்.கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் நிறைவேற்றப்பட்ட கோரிக்கை தீா்மானங்கள் குறித்து முதல்வா் மற்றும் துறை அமைச்சரை சந்தித்து விரைவில் வலியுறுத்தப்படும் என சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் கூறினாா்.

கூட்டத்தில் மாநில அலோசகா் கு.சரவணன், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநில பொதுச் செயலா் வி.சிவக்குமாா், மாநில செயலா்கள் ஜே.இருதயராஜ், ஏ.வி.விவேகானந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.