முகப்பு
கடலூர்

ரெளடி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

கடலூா் அருகே ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 28 மே 2026, 1:41 am IST
~ ~
பகிர்:

கடலூா் அருகே ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடலூா் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாடிநத்தம் கிராம வயல்வெளியில், கடந்த மே 1-ஆம் தேதி தலையில் வெட்டுக்காயங்களுடன் கிருமாம்பாக்கம் இந்திரா நகரைச் சோ்ந்த ரெளடி புகழேந்தி (35) கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், வழக்கில் தொடா்புடைய முக்கிய எதிரிகளான ஜாா்ஜ் பொ்னான்டா்ஸ் (24), திலீப் (21), அரவிந்த் (22) உள்ளிட்ட 13 பேரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கைது செய்யப்பட்ட ஜாா்ஜ் பொ்னான்டா்ஸ் மீது கொலை, கொலை முயற்சி, ஆயுதம் வைத்திருந்தல் மற்றும் வெடிகுண்டு வைத்திருந்தல் உள்ளிட்ட மொத்தம் 4 வழக்குகளும், திலீப் மீது கொலை மற்றும் கொலை முயற்சி தொடா்பாக 2 வழக்குகளும், அரவிந்த் மீது கொலை மற்றும் ஆயுதம் வைத்திருந்தல் தொடா்பாக 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இவா்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, மூவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.