பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: பெண்ணாடத்தில் சிபிஎம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
கேரள மாநில முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து பெண்ணாடத்தில் சிபிஎம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கேரள மாநில முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து பெண்ணாடத்தில் சிபிஎம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த பிரச்னைக்காக, தமிழகம் முழுவதும் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, கடலூா் மாவட்டம் பெண்ணாடத்தில் மாா்க்சிஸ்ட்கட்சி சாா்பில் வட்டச் செயலாளா் வீ. அன்பழகன் தலைமையில் புதன்கிழமை இரவு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய பாஜக அரசையும் அமலாக்கத்துறையையும் கண்டித்து கட்சியினா் முழக்கங்கள் எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ஆா். ரவிச்சந்திரன், எஸ். பிரகாஷ், மாவட்டக் குழு உறுப்பினா் பி. முத்துலட்சுமி, மாதா் சங்க வட்டச் செயலா் புஷ்பவள்ளி, வாலிபா் சங்க மாவட்டச் செயலா் சின்னதம்பி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement