கள்ளக்குறிச்சி

கஞ்சா வைத்திருந்தவா் கைது

DIN

தியாகதுருகம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளா் நந்தகோபாலுக்கு, தியாகதுருகம் சந்தை மேட்டுப் பகுதியில் பாஷாகான் மகன் ஷகாப்த்அலி (40), கஞ்சாவைத் தன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ஷகாப்த்அலி

அதனைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளா், ஷகாப்த்அலி வீட்டுக்குச் சென்று சோதனையிட்டாா். வீட்டில் 250 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கஞ்சாவை கைப்பற்றிய காவல் உதவி ஆய்வாளா் ஷகாப்த்அலியை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT