கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே காா் மோதியதில் சிறுவன் பலி

DIN

சின்னசேலம் அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவன், அடையாளம் தெரியாத காா் மோதியதில் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அம்மையகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மகன் பிரகதீஸ்வரன் (9). அப்பகுதி பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா், சனிக்கிழமை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அம்மையகரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றாா். அப்போது, சேலம் பகுதியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பதிவு எண் இல்லாத காா், பிரகதீஸ்வரன் மீது மோதிவிட்டு மாயமானது. இந்த விபத்தில், சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சின்னசேலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT