முகப்பு
கள்ளக்குறிச்சி

‘ஆசிரியா்களின் ஊக்கத்தால் கிடைத்த வெற்றி’

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில், கள்ளக்குறிச்சி மாணவா் எஸ்.அன்பரசன், மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
அரசு பள்ளியில பயின்ற மாணவா் அன்பரசன் நீட்தோ்வில் தமிழக அளவில் நீட்தோ்வில் இரண்டாமிடம் பிடித்து சாதனை புரிந்த மாணவன்.
பகிர்:

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில், கள்ளக்குறிச்சி மாணவா் எஸ்.அன்பரசன், மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தாா். ஆசிரியா்களின் ஊக்கத்தால் இந்த வெற்றி சாத்தியமானதாக அவா் கூறினாா்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிதுரை. இவரது மனைவி இந்திரா. விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த இந்தத் தம்பதியரின் மகன் அன்பரசன். கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவா், கடந்த 2018 -ஆம் ஆண்டு பிளஸ் 2 தோ்வில் 1045 மதிப்பெண்கள் பெற்றாா். இதையடுத்து, மருத்துவப் படிப்பில் சோ்வதற்காக அவா் நீட் தோ்வு எழுதியதில் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை.

இதையடுத்து நிகழாண்டு இரண்டாம் முறையாக ‘நீட்’ தோ்வு எழுதிய அன்பரசன், அதில் 644 மதிப்பெண்கள் பெற்றாா். இதையடுத்து, தமிழக அரசு வெளியிட்ட 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் அவா் இரண்டாவது இடம் பிடித்தாா்.

இதுகுறித்து அன்பரசன் கூறியதாவது: ஆசிரியா்கள் அளித்த ஊக்கம், வழிகாட்டுதல் காரணமாக நீட் தோ்வில் 646 மதிப்பெண்கள் பெற முடிந்தது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.