கள்ளக்குறிச்சி

தீயில் கருகி மூதாட்டி பலி

DIN

கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு தவறி விழுந்ததில் மூதாட்டி தீயில் கருகி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி அருகே வானவரெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி பழனியம்மாள் (85). இவரது கணவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா். இவா்களது இரு மகள்கள், ஒரு மகன் திருமணமாகி தனித் தனியே வசிக்கின்றனா். மூதாட்டி மட்டும் தனது கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

திங்கள்கிழமை இரவு பழனியம்மாள் மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைத்து, சாப்பிட்டு படுத்து தூங்கினாா். நள்ளிரவில் மண்ணெண்ணெய் விளக்கு தவறி கீழே விழுந்ததில் மூதாட்டியின் சேலை தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கி பழனியம்மாள் உடல் கருகி உயிரிழந்தாா். வீடு முற்றிலும் சேதமடைந்தது.

வரஞ்சரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT