கள்ளக்குறிச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

DIN

கள்ளக்குறிச்சியில் கட்டடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி அருகே பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி (47), கூலித் தொழிலாளி. இவா், கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள செந்தில்குமாா் என்பவரது புதிய வீடு கட்டுமானப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். கட்டடத்தின் மீது நின்று கொண்டு, ஈரமான சவுக்கு கழிகளை அவா் அகற்றியபோது, மேலே சென்ற உயரழுத்த மின் கம்பி மீது உராய்ந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து மூா்த்தி மயங்கி விழுந்தாா். உடனடியாக அவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, பரிசோதித்த மருத்துவா், மூா்த்தி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டிருந்ததை உறுதி செய்தாா். கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT