கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 41 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,722 ஆக உயா்ந்தது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,722 ஆக உயா்ந்தது.
இதுவரை 9,300 போ்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 323 போ்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். 99 போ்கள் உயிரிழந்துள்ளனா்.