கள்ளக்குறிச்சி

தென்கீரனூா், சித்தலூரில் கொடி அணிவகுப்பு

DIN

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா், சித்தலூா் ஆகிய கிராமங்களில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த இரு கிராமங்களிலும் பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளதால் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், காவல் துறையினா், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் 120 போ் கொடி அணிவகுப்பு நடத்தினா். இவா்கள் இரு கிராமங்களிலும் முக்கிய வீதிகள் வழியாக துப்பாக்கி ஏந்தி அணிவகுத்துச் சென்றனா்.

கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ச.முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT