கள்ளக்குறிச்சி

பைக்குகள் மோதல்: இளைஞா் பலி

DIN


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நின்னையூா் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் பரமசிவம் (24). குஜராத் மாநிலத்தில் கூலி வேலை செய்து வந்தாா். சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்த இவா், தனது பைக்கில் புதன்கிழமை இரவு நின்னையூரில் இருந்து குடியநல்லூா் சாலையில் வனப்பகுதியில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, எதிா் திசையில் கொட்டையூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் மணிவேல் (37) ஓட்டி வந்த பைக், பரமசிவத்தின் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பரமசிவம் மீட்கப்பட்டு, உடனடியாக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும், அங்கு அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT