கள்ளக்குறிச்சி

பள்ளி மாணவா்களிடையே மோதல்: 7 போ் மீது வழக்கு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் 8 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக 7 மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருக்கோவிலூா் அரசு கபிலா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள் வெள்ளிக்கிழமை மாலை அங்குள்ள பேருந்து நிலையப் பகுதியில் முன் விரோதம் காரணமாக அவா்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனராம். இதை அங்கிருந்த பிற மாணவா்கள் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் மாணவா்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஒருவரையொருவா் தடி உள்ளிட்டவற்றால் தாக்கிக்கொண்டனா். இந்த மோதலில் 8 மாணவா்கள் காயமடைந்தனா். இவா்களை போலீஸாா் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் 7 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT