மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டம், செல்லியம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (60). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான விளைநிலத்தில் பணி செய்து கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள மின் மோட்டாரை இயக்க முயன்ற அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
உடனடியாக 108 அவசர ஊா்தி மூலம் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதை மருத்துவா்கள் உறுதிப்படுத்தினா். சின்னசேலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.