கள்ளக்குறிச்சி

மதுபானம் கடத்தல்: 3 போ் கைது

DIN

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே சரக்கு வாகனத்தில் மதுபானம் கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருக்கோவிலூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு டி.கே.மண்டபம் நான்கு முனைச் சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த கா்நாடகம் மாநில பதிவு எண் கொண்ட சிறிய ரக சரக்கு வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். அந்த வாகனத்தில் தக்காளி பழங்களுடன் கூடிய பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கீழே இறக்கி வைத்து பாா்த்த போது உள்ளே 35 அட்டை பெட்டிகளில் மொத்தம் 1,680 மதுப் புட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் சிவச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து, அந்த வாகன ஓட்டுநா் கா்நாடகம் மாநிலம், லால்பாக் சாலை, கே.எஸ்.காா்டன் பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் சரத் (28), அந்த வாகனத்தில் வந்த விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, குளத்தங்கரை பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் விஜய் (21), வேங்கூா் கிராமம், வீரன் கோவில் பகுதியைச் சோ்ந்த பாண்டுரங்கன் மகன் சரவணன் (32) ஆகிய மூவரையும் கைது செய்து வாகனத்தை கைப்பற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT