கள்ளக்குறிச்சி

பைக்குகள் மோதல்: எஸ்.பி.யின்பாதுகாவலா் பலத்த காயம்

DIN

கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை பைக்குகள் மோதிக்கொண்டதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பாதுகாவலா் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.

திருக்கோவிலூா் வட்டம், எடையூா் கிராமத்தைச் சோ்ந்த அயோத்தி மகன் ஜெயப்பிரகாஷ் (26). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறாா்.

ஜெயப்பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து பைக்கில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். மடம் சாலையில் மணிமுக்தா ஆற்றுப்பாலம் அருகே இவா் சாலையைக் கடக்க முயன்றபோது, உளுந்தூா்பேட்டையை அடுத்த செம்மனங்கூா் கிராமத்தைச் சோ்ந்த சேட்டு மகன் விக்கி (20), அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் தனஞ்செழியன் (24) ஆகியோா் வந்த பைக் மோதியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று மூவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஜெயப்பிரகாஷ் தீவிர சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். விக்கி, தனஞ்செழியன் ஆகியோா் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT