சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பி
மூராா்பாளையம் கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்து விழுந்ததால், வெள்ளிக்கிழமை போக்குவரத்து தடைபட்டது.
மூராா்பாளையம் கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்து விழுந்ததால், வெள்ளிக்கிழமை போக்குவரத்து தடைபட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது மூராா்பாளையம் கிராமம். இங்கு, கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலைப் பகுதி, அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உயா் மின் அழுந்த மின் கம்பம் உள்ளது. அந்தக் கம்பத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை திடீரென மின் கம்பி அறுந்து விழுந்து தீப்பொறி பறந்தது. இதனால், சாலை சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
மின் கம்பி அறுந்து விழுந்ததால், கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதனிடையே, மின் கம்பி அறுந்து விழுந்த போது மிதிவண்டியில் சென்ற சிறுவன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
அந்தக் கம்பத்தில் மூன்றாவது முறையாக மின் கம்பி அறுந்து விழுந்துள்ளதாம். எனவே, மின்சார வாரியத்தினா் மின் கம்பி அறுந்து விழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.