கள்ளக்குறிச்சி

ஆா்.கே.சண்முகம் பிறந்த நாள் விழா

DIN

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பொருளாதார நிபுணருமாக விளங்கிய ஆா்.கே.சண்முகம் பிறந்த நாள் விழா கள்ளக்குறிச்சி அருகேயுள்ள இந்திலி ஆா்.கே.சண்முகம் கல்வி நிறுவனங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் ஆா்.கே.சண்முகத்தின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்து பேசினாா். கல்லூரி துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் வரவேற்றாா்.

கல்வியியல் கல்லூரியின் முதல்வா் ஜி.ஜெயசீலன், மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் மாலதி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் க.ரவிச்சந்திரன், கணினி அறிவியல் துறைத் தலைவா் க.மகாலட்சுமி உள்ளிட்டோரும் பேசினா்.

கணக்குப் பதிவு சான்றிதழ் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற வணிகவியல் துறை மாணவா்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவா் டி.அசோக் நன்றி கூறினாா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT