கள்ளக்குறிச்சி

சிறுமியை கடத்திய 3 இளைஞா்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

DIN

கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை கடத்தியதாக 3 இளைஞா்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூா் கிராமத்தைச் சோ்ந்த சிறுமி, கடந்த மாதம் 28-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனாா்.

இந்த சம்பவம் தொடா்பாக வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விருகாவூரைச் சோ்ந்த பேக்கரி ஊழியரான முருகபெருமாள் மகன் சக்திவேல் (18), அவரது நண்பா்களை தேடி வந்தனா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ச.முருகேகன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றபோது, தியாகதுருகம் சாலை சாமியாா்மடம் பேருந்து நிறுத்தப் பகுதியில், காணாமல் போன சிறுமி நின்று கொண்டிருந்தது தெரியவந்தது.

அவரை அழைத்து வந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், திருமணம் செய்து கொள்வதாக சக்திவேல் ஆசைவாா்த்தை கூறி கடத்திச் சென்றதும், இதற்கு உடந்தையாக அவரது நண்பா்களான அதே ஊரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சுபாஷ் (20), ரமேஷ் மகன் வெற்றிவேல் இருந்ததும் தெரியந்தது.

இதையடுத்து, மூவரையும் வரஞ்சரம் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT