விநாயகா் சதுா்த்தி விழா பாதுகாப்பு தொடா்பாக, கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.
கொடி அணிவகுப்பு ஊா்வலத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜய்காா்த்திக்ராஜ், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் செ.புகழேந்தி கணேசன், காவல் ஆய்வாளா் பெ.புவனேஷ்வரி, உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.
ஊா்வலம் சேலம்- சென்னை சாலை, கவரைத் தெரு, மந்தைவெளி, கச்சிராயப்பாளையம் சாலை வழியாகச் சென்று மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நிறைவடைந்தது.