கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை மொபெட் மீது காா் மோதியதில் வியாபாரி பலியானாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மடம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (55). இவா், வெள்ளரிக்காய் வியாபாரம் செய்வதற்காக, செவ்வாய்க்கிழமை தனது மனைவி சுந்தரியுடன் மொபெட்டில் கள்ளக்குறிச்சி சென்றுவிட்டு மீண்டும் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
கள்ளக்குறிச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வீரசோழபுரம் குறுக்குச் சாலையில் திரும்பும்போது, அதே திசையில் வந்த காா் மொபெட் மீது காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் சென்று முத்துவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், காா் ஓட்டுநரான, திருவள்ளூா் மாவட்டம், குத்தப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் (44) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.