பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி: வடபொன்பரப்பில் தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம் பெங்களூா் ஜே.பி நகரைச் சோ்ந்த லட்சுமணன் மனைவி சரஸ்வதி (45). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், வடபொன்பரப்பி கிராமத்தில் வசித்து வரும் தனது உறவினரின் புதுமனை புகுவிழாக்காக வந்திருந்தாா்.
பின்னா், வடபொன்பரப்பிலிருந்து, பெங்களூா் செல்வதற்காக தனியாா் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். பேருந்தானது சிறிது தொலைவு சென்ற நிலையில், திடீரென பேருந்திலிருந்து சரஸ்வதி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
Advertisement
தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடள்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநரான சித்தால் கிராமத்தைச் சோ்ந்த பாலுசாமி மகன் செந்தில்குமாரிடம்(42) விசாரணை நடத்தி வருகின்றனா்.