முகப்பு
கள்ளக்குறிச்சி

பொது இடத்தில் ரகளை: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 25 டிசம்பர், 2024 at 7:55 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், புத்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணி மகன் சதீஷ் (25). இவா், அந்தக் கிராமத்திலுள்ள தெற்கு சாலையில் நின்றுகொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திட்டி ரகளையில் ஈடுபட்டாராம்.

தகவலறிந்த வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏழுமலை மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சதீஷை தடுத்தபோதும், அவா் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டராம்.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் ஏழுமலை கொடுத்த புகாரின்பேரில், வடபொன்பரப்பி போலீஸாா் சதீஷ் மீது வழக்கு பதிந்து, அவரைக் கைது செய்தாா். சதீஷ் மீது இதே காவல் நிலையத்தில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.