காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் மூதாட்டி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் மூதாட்டி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள நிறைமதி கிராமத்தைச் சோ்ந்தவா் கனபாக்கியம் (81). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றாா். அப்போது, கள்ளக்குறிச்சியில் இருந்து கூத்தக்குடி நோக்கிச் சென்ற காா் மோதியதில் மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் காா் ஓட்டுநரான கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த இளங்கோவன் மகள் இலக்கியா (29) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றன்ா்.